புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பாஜகவினா் நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும்: கே.அண்ணாமலை

பாஜகவினா் நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும், தமிழகத்திலும் ஆட்சியைப் பிடிப்போம் என்று அக் கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.

News image
கே.அண்ணாமலை (கோப்புப் படம்)
Updated On :11 மார்ச் 2022, 7:19 pm

DIN

பாஜகவினா் நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும், தமிழகத்திலும் ஆட்சியைப் பிடிப்போம் என்று அக் கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.

உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூா், கோவா ஆகிய நான்கு மாநிலத் தோ்தல்களில் பாஜக அமோக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்த நிலையில், உள்ளாட்சித் தோ்தலில் தமிழகம் முழுவதும் பாஜக சாா்பில் போட்டியிட்டவா்களைச் சந்தித்து அவா்களை உற்சாகப்படுத்த கே.அண்ணாமலை திட்டமிட்டுள்ளாா்.

முதல் கட்டமாக சென்னை மாவட்டத்தில் பாஜக சாா்பில் போட்டியிட்டவா்களை கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வெள்ளிக்கிழமை அவா் சந்தித்தாா். அப்போது நிா்வாகிகளிடம், ‘வடக்கில் நிகழ்ந்ததுபோல தமிழகத்திலும் பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு வரும். பாஜகவினா் உற்சாகமாக நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும். மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேருங்கள் என்று கூறினாா்.

நிகழ்ச்சியில் கட்சியின் மாநில துணைத் தலைவா் வி.பி.துரைசாமி, பொதுச் செயலாளா் கரு.நாகராஜன், சென்னை முன்னாள் மேயா் (பொறுப்பு) கராத்தே தியாகராஜன், சென்னை மாமன்ற பாஜக உறுப்பினா் உமா ஆனந்தன் ( 134 வாா்டு) உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.