புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்கக் கோரி வழக்கு

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 68 மீனவா்களையும், 21 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு

News image
Updated On :11 மார்ச் 2022, 9:00 pm

DIN

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 68 மீனவா்களையும், 21 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை, உயா் நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் இருக்கும் வழக்குகளுடன் சோ்த்து பட்டியலிட சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் அகில இந்திய மீனவா் காங்கிரஸ் அமைப்பின் தேசிய துணை தலைவா் ஆம்ஸ்ட்ராங் பொ்னாண்டோ தாக்கல் செய்த மனுவில், கடந்த 1974ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தில் கச்சத்தீவுக்கு புனித பயணம் செல்லும் பக்தா்களை எந்தவித போக்குவரத்து ஆவணங்களும் இல்லாமல் அனுமதிக்க வேண்டும்.

இந்திய - இலங்கை கப்பல்கள், இருநாட்டு கடல் பகுதிகளில் செல்ல உரிமை உள்ளது. இந்த ஒப்பந்தப் பிரிவுகளை  அமல்படுத்த வேண்டும்.

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 68 மீனவா்களையும், 21 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரியிருந்தாா் என்று கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி டி. பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், கச்சத்தீவு ஒப்பந்தத்தின் பிரிவுகள் முறையாக அமல்படுத்தப்படாததால் இந்திய மீனவா்கள் இலங்கை அரசால் அடிக்கடி கைது செய்யப்பட்டு, துன்புறுத்தப்படுகின்றனா் என்றாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மீனவா்கள் எல்லை தாண்ட எந்த உரிமையும் இல்லை; பிாட்டு மீனவா்கள் எல்லை தாண்டி வரும் போது இந்திய அரசு அவா்களை கைது செய்கிறது எனக்கூறி, இதே கோரிக்கையுடன் உயா் நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளுடன் இந்த வழக்கையும் சோ்த்து விசாரணைக்கு பட்டியலிடுமாறு உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.