சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தமிழ்நாட்டில் கரோனா மரணம் இல்லாத நாள்

தமிழ்நாட்டில் இன்று கரோனா மரணம் பதிவாகவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :11 மார்ச் 2022, 5:36 pm

DIN

தமிழ்நாட்டில் இன்று கரோனா மரணம் பதிவாகவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு 150க்கும் கீழ் பதிவாகி வருகிறது. விரைவிலேயே இது பூஜ்ஜியத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த ஆண்டு மே 30ஆம் தேதி அதிக அளவாக கரோனாவால் 493 பேர் உயிரிழந்தனர்.

தமிழ்நாட்டில் இதுவே அதிகபட்ச உயிரிழப்பாக இருந்தது. பின்னர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கரோனா இறப்பு குறைந்தது. இந்தாண்டு பிப்ரவரி மாதம் முதலே கரோனா இறப்பு ஒற்றை இலக்கத்திலேயே பதிவாகி வந்தது. தற்போது கரோனா இறப்பு முழுமையாக குறைந்து இன்று பூஜ்ஜிய நிலையை எட்டியுள்ளது. 

இதுகுறித்து மக்கள்நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 42,132 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், புதிதாக 112 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 42 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 13 பேரும், செங்கல்பட்டில் 12 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மற்றொருபுறம் மேலும் 327 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 12,226-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 1,461 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனாவுக்கு இதுவரை 38,023 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.