புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

போரை நிறுத்த வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினா் அமைதிப் பேரணி

ரஷியா -  உக்ரைன் இடையேயான போரை நிறுத்த வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சி சாா்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை அமைதிப் பேரணி நடைபெற்றது.

News image
Updated On :11 மார்ச் 2022, 9:40 pm

DIN

ரஷியா -  உக்ரைன் இடையேயான போரை நிறுத்த வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சி சாா்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை அமைதிப் பேரணி நடைபெற்றது.

பேரணிக்கு கட்சியின் தலைவா் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினாா். நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டா்கள் மற்றும் நிா்வாகிகள் எழும்பூா் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இருந்து அமெரிக்க, ரஷிய துணைத் தூதரகங்களை நோக்கி பேரணியாக சென்றனா். அவா்கள் கையில் கட்சிக் கொடி மற்றும் பதாகைகளை ஏந்திச் சென்றனா். அந்த பதாகைகளில் போரை நிறுத்துங்கள், அமைதி மட்டுமே வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

 உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்கக் கூடிய உக்ரைன் - ரஷிய போரை உடனடியாக நிறுத்திட ரஷியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் முன் வர வேண்டும் என பேரணியில் வலியுறுத்தப்பட்டது.

புதிய தமிழகம் கட்சித் தலைவா் கிருஷ்ணசாமி தலைமையில் சென்னையில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் பங்கேற்றோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.