நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பேரறிவாளன் வீடு திரும்பினார்

புழல் சிறைக்கு அழைத்து செல்லபுழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பேரறிவாளன் மீண்டும் வீடு திரும்பினார்.ப்பட்ட பேரறிவாளன் மீண்டும் வீடு திரும்பினார்.

News image

பேரறிவாளன்.

Updated On :11 மார்ச் 2022, 2:57 pm

DIN

புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பேரறிவாளன் மீண்டும் வீடு திரும்பினார்.

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் அவருடைய தாயார் அற்புதம்மாள் முதலமைச்சருக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். 

கடந்த மே 28-ஆம் தேதி முதல் தற்போது வரை பேரறிவாளன் சுமார் 9 மாத காலமாக பரோல் வழங்கப்பட்டு வீட்டிலேயே தங்கியிருந்தார். மேலும், பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் விடுதலைக் கோரி மனு அளிக்கப்பட்டிருந்தது. தமிழக முதலமைச்சருக்கு பேரறிவாளனின் தாயார் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். 

இந்த நிலையில், பேரறிவாளனுக்கு புதன்கிழமை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிணை வழங்கி உத்தரவிட்டனர். பரோலில் வெளியே வந்த பேரறிவாளன் வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் பரோலை ரத்து செய்ய வேலூர் ஆயுதப்படை டிஎஸ்பி மணிமாறன் தலைமையில், சுமார் 20-க்கும் மேற்பட்ட போலீஸார் பலத்த பாதுகாப்பில் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால் பிணை ஆணை உத்தரவு சிறைக்கு கிடைக்காத தகவலையடுத்து ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பேரறிவாளன் மீண்டும் வீடு திரும்பினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.