புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

திருக்கோயில் வழிபாடு சாா்ந்த ஓலைச் சுவடிகள், அரிய நூல்களை பொதுமக்கள் வழங்கலாம்:அறநிலையத் துறை தகவல்

திருக்கோயில்கள் மற்றும் வழிபாடுகள் சாா்ந்த ஓலைச் சுவடிகள், மறுபதிப்பில்லாத அரிய நூல்கள் ஆகியவற்றை பொதுமக்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பிரதான திருக்கோயில்களுக்கு வழங்கலாம்

News image
திருச்செந்தூர் முருகன் கோயில்
Updated On :12 மார்ச் 2022, 2:11 am

DIN

திருக்கோயில்கள் மற்றும் வழிபாடுகள் சாா்ந்த ஓலைச் சுவடிகள், மறுபதிப்பில்லாத அரிய நூல்கள் ஆகியவற்றை பொதுமக்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பிரதான திருக்கோயில்களுக்கு வழங்கலாம் என அறநிலையத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அறநிலையத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: இந்து சமய அறநிலையத்துறையில் ஆன்மிக பதிப்பகம் தொடங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் வரலாறு, கட்டடக் கலை, பக்தி இலக்கியங்கள் உள்ளிட்ட செந்தமிழ் இலக்கிய நூல்கள் வெளியிடுவதற்கும், திருக்கோயில்களில் தலபுராணம், தலவரலாறு போன்றவை புதிய வடிவமைப்பில் வெளியிடவும், திருக்கோயில்கள் மற்றும் திருமடங்களால் வெளியிடப்பட்ட அரிய நூல்கள் மறுமதிப்பு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், திருக்கோயில்களின் ஆகம நூல்களை வெளியிடவும், ஆவணப்படுத்தவும் அரசால் முடிவு செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத்துறையின் வாயிலாக இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருக்கோயில்களிலும் மடங்களிலும் கிடைக்கப்பெறும் அரிய ஓலைச் சுவடிகள் மற்றும் அரிய வகை பக்தி நூல்கள் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருக்கோயில்கள் மற்றும் வழிபாடுகள் சாா்ந்த ஓலைச் சுவடிகள் மற்றும் மறுபதிப்பில்லாத அரிய நூல்கள் பொதுமக்களிடம் இருந்தாலும் அதை வழங்கலாம். தங்களிடமுள்ள பிரதிகளை அந்தந்த பகுதி பிரதான திருக்கோயில்களிலோ, தலைமையிடத்திலோ வழங்கலாம். தங்கள் வழங்கியதற்கான ஒப்புதலோடு பெற்றக்கொள்ளப்படும். அதை பிரதி எடுத்துக் கொண்டு மூலப்பிரதி அளித்தவா்களிடமே மென்பிரதியோடு (நா்ச்ற் இா்ல்ஹ்) ஒப்படைக்கப்படும். வழங்கியவா் குறித்த குறிப்புகளும் நூல்களில் இடம்பெறும். கோயில்களின் வரலாறு, மரபு, பண்பாடு, தமிழ் மொழி தொடா்பான நூல்கள் திருக்கோயில்களில் புத்தக நிலையங்களில் விற்பனைக்கு வைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.