தமிழ் பேரரசு கட்சியின் பொதுசெயலரும், திரைப்பட இயக்குநருமான வ. கௌதமன் தூத்துக்குடியில் விமான நிலையத்தில் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், குறிஞ்சாக்குளம் காந்தாரியம்மன் கோயில் வழிபாட்டு உரிமை போராட்டத்தில் உயிரிழந்த நான்கு பேருக்கு நடுகல் வழிபாடு செய்யவும், காந்தாரியம்மன் சிலை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ப்பதற்காக தமிழ் பேரரசு கட்சியின் பொதுசெயலாளரும், திரைப்பட இயக்குநருமான வ. கௌதமன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.
தூத்துக்குடியில் விமான நிலையத்தில் கைது செய்ய வந்த போலீஸாருடன் பேசும் திரைப்பட இயக்குநர் வ. கௌதமன்.
இதனிடையே அந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் இருக்கும் வகையில் கௌதமனை காவல்துறையினர் தூத்துக்குடி விமான நிலையத்தில் கைது செய்தனர்.