திருச்சி: ஹிஜாப் விவகாரத்தில் ஏற்கெனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு முரணாக கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாக மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் தெரிவித்தார்.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கு முரணானது. முற்றிலும் வெறுப்பு மனப்பான்மையுடன் அளிக்கப்பட்ட தீர்ப்பு. அடுத்த ஆண்டு கர்நாடகாவில் தேர்தல் வர இருப்பதால் பல்வேறு பிரச்சனைகளிலிருந்து திசை திருப்ப பா.ஜ.க இதுபோன்ற செயல்பாடுகளில் இறங்கி உள்ளது.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. விகிதாச்சார அடிப்படையில் 5 மாநில தேர்தல்களிலும் பா.ஜ.க விற்கு எதிரான வாக்குகளே அதிகம் விழுந்துள்ளன. பாஜக-வை கொள்கை ரீதியாக எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியைப் போன்று, இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைய வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


