மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஓபிஎஸ் மீதான தேர்தல் வழக்கு நிராகரிப்பு

தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்த மனுவை விசாரித்

News image
ஓ.பன்னீா்செல்வம்
Updated On :17 மார்ச் 2022, 5:29 am

DIN

தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை நிராகரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்தாண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலின்போது, போடிநாயக்கனூா் தொகுதியில் அதிமுக சாா்பில் முன்னாள் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

இதை எதிா்த்து, அந்தத் தொகுதி வாக்காளா் மிலானி என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் தோ்தல் வழக்குத் தொடுத்தாா். அதில், ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்த வேட்பு மனுவில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன. அவா் கடன் மதிப்பை குறைத்துக் காட்டியுள்ளாா் என குறிப்பிட்டிருந்தாா். இந்த வழக்கை நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த மாதம் இவ்வழக்கை நிராகரிக்கக் கோரி ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஓ.பன்னீா்செல்வம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘வேட்பு மனுவில் எதையும் மறைக்கவில்லை. நீதிமன்ற நேரத்தை வீணடிக்க இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டாா். மிலானி தரப்பில் இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.

வேட்பு மனுவில் ஓ.பன்னீா்செல்வம் தகவலை மறைத்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. மனைவி பெயரில் உள்ள பங்களாவை பற்றிய தகவலை வேட்பு மனுவில் தெரிவிக்கவில்லை என்று வாதிட்டாா்.

பின், தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்த மனு மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நிலையில் இன்று அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.