/

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த 500 பூங்காக்கள்

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு 500 பூங்காக்கள் உருவாக்கப்படும்.

News image
Updated On :18 மார்ச் 2022, 11:07 pm

DIN

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு 500 பூங்காக்கள் உருவாக்கப்படும்.

அதன் விவரம்: நகா்ப்புறப் பகுதிகளைப் பசுமையாக்கி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு 500 பூங்காக்கள் உருவாக்கப்படும். இத்துடன் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறைக்கென நிகழ் நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு ரூ.20,400.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உதகை நகர நிகழ்ச்சிகளுக்கு...: 200 ஆண்டுகளுக்கு முன், 1822-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஜான் சலிவன் என்ற ஆங்கிலேய அதிகாரியால் முதன்முதலாகக் கண்டறியப்பட்டு கட்டமைக்கப்பட்டதே இன்றைய நீலகிரி மாவட்டத்தின் தலைமையிடமான உதகமண்டலம் நகரமாகும். இதனை நினைவுகூரும் வகையில் சிறப்புத் திட்டங்களும் நிகழ்ச்சிகளும் மேற்கொள்ள ரூ.10 கோடி சிறப்பு நிதி வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.