/

2 மாதமாக குடிநீர் வரவில்லை: வளையப்பட்டி கிராம மக்கள் சாலை மறியல்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வளையப்பட்டி கிராம பொதுமக்கள் குடிநீர் வராததால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News image
குடிநீர் கேட்டு பேரையூர் சாலையில் சாலை மறியலில் ஈடுப்பட்ட வளையப்பட்டி கிராம மக்கள்.
Updated On :1 பிப்ரவரி 2024, 8:43 am

DIN


உசிலம்பட்டி:  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வளையப்பட்டி கிராம பொதுமக்கள் குடிநீர் வராததால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வலையபட்டி கிராமத்தில் இரண்டு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வரவில்லை என பொதுமக்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து பலமுறை அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறுகின்றனர்.

இந்நிலையில், உசிலம்பட்டி பேரையூர் சாலையில் கிராம பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் உசிலம்பட்டி நகர் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். 

காலை நேரம் சாலை மறியல் ஏற்பட்டதால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அப்பகுதியிலிருந்து உசிலம்பட்டிக்கு இரண்டு கிலோமீட்டர் நடந்தே சென்றனர். சாலை மறியல் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையும் படிக்க | மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.