/

பிரதமரின் வீட்டு வசதித் திட்டப் பணிகளுக்கு ரூ.4,848 கோடி

பிரதமரின் வீட்டு வசதித் திட்டப் பணிகளை விரைவுபடுத்திட ரூ.4,848 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 மார்ச் 2022, 7:30 pm

DIN

பிரதமரின் வீட்டு வசதித் திட்டப் பணிகளை விரைவுபடுத்திட ரூ.4,848 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ், 2016-2020- ஆம் ஆண்டுகளில் ஒப்பளிக்கப்பட்ட 1 லட்சத்து 77,922 வீடுகளின் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்திட, மேற்கூரை அமைப்பதற்காக கூடுதலாக வழங்கப்படும் ரூ.70,000 உள்பட ஆண்டுதோறும் வீடு ஒன்றுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 68,000 மாநில அரசு வழங்கி வருகிறது. 2021-22-ஆம் ஆண்டில் 2 லட்சத்து 30,788 புதிய வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக ரூ.4,848 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமத்துவபுரங்களை சீரமைக்க...: சமத்துவம் தழைக்கும் ஏற்றத்தாழ்வுகளற்ற தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில், முன்னாள் முதல்வா் கருணாநிதியால் பெரியாா் நினைவு சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டன. முதற்கட்டமாக, கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி புறக்கணிக்கப்பட்ட 149 சமத்துவபுரங்கள் ரூ.190 கோடி செலவில் சீரமைக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.