/

தவறான பிரசாரத்தை தடுக்க சமூக ஊடக சிறப்பு மையம்

சமூக ஊடகங்களில் தவறான பிரசாரத்தை தடுக்க காவல்துறையில் சமூக ஊடக சிறப்பு மையம் திறக்கப்படும்.

News image
Updated On :18 மார்ச் 2022, 11:12 pm

DIN

சமூக ஊடகங்களில் தவறான பிரசாரத்தை தடுக்க காவல்துறையில் சமூக ஊடக சிறப்பு மையம் திறக்கப்படும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள்களின் பயன்பாடு ஆகியவற்றைத் தடுப்பதற்கு தமிழக அரசு தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றது.

காவல் துறைக்குத் தேவைப்படும் அனைத்துக் கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்படும். இந்த வகையில், சமூக ஊடகங்களில் செய்யப்படும், தவறான பிரசாரங்களின் விளைவாக, அதிகரித்து வரும் குற்றச் செயல்களைத் தடுத்திட, ‘சமூக ஊடக சிறப்பு மையம்‘ அமைக்கப்படும்.

தமிழக காவல் துறைக்கு 10,285.22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.