தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ராசிபுரம்:  சர்வதேச காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நாள் பேரணி

நாமக்கல் மாவட்ட 'தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் -2025' சார்பில், ராசிபுரத்தில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த பேரணியை நகரமன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர் கொடியசைத்து

News image
காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்ட அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், தனியார் கல்லூரி செவிலியர் மாணவர்கள் மற்றும் ராசிபுரம் ரோட்டரி சங்க நிர்வாகிகள்.
Updated On :21 மார்ச் 2022, 5:11 am

DIN

ராசிபுரம்:  நாமக்கல் மாவட்ட 'தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் -2025' சார்பில், ராசிபுரத்தில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த பேரணியை நகரமன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

காசநோய் பரவுதல் பற்றியும், அதை தடுப்பது குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மார்ச் 24 ஆம் தேதி சர்வதேச காசநோய் நாள் கடைபிடிக்கப்படுகிறது. 

இதனை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் -2025 சார்பில், ராசிபுரம் அரசு மருத்துவமனை மற்றும் ராசிபுரம் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய காசநோய் விழிப்புணர்வு பேரணியை ராசிபுரம் நகரமன்றத் தலைவர் கவிதா சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பொதுமக்களிடையே காசநோய் குறித்து விழிப்புணர்வு பேரணி ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தொடங்கி, சின்னக்கடைவீதி, பெரியகடைவீதி வழியாக சென்று மீண்டும் அரசு மருத்துவமனையில் நிறைவு பெற்றது. முன்னதாக, காசநோய் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நடந்தது.

இந்த பேரணியில், ராசிபுரம் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், தனியார் கல்லூரி செவிலியர் மாணவர்கள் மற்றும் ராசிபுரம் ரோட்டரி சங்க  நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.