தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இடைத்தேர்தல் விண்ணப்பங்களில் ஜெ. கைரேகை வைத்தது தெரியும்: ஓபிஎஸ்

இடைத்தேர்தல் தொடர்பான அதிமுக வேட்பாளர்களின் படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது தனக்குத் தெரியும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னிர்செல்வம் தெரிவித்துள்ளார்.

News image

இடைத்தேர்தல் விண்ணப்பங்களில் ஜெ. கைரேகை வைத்தது தெரியும்: ஓபிஎஸ்

Updated On :22 மார்ச் 2022, 9:34 am

DIN

இடைத்தேர்தல் தொடர்பான அதிமுக வேட்பாளர்களின் படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது தனக்குத் தெரியும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னிர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஆறுமுகசாமி ஆணையத்தில் 2வது நாளாக ஆஜராகி ஓ. பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்து வருகிறார்.

இன்று அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மருத்துவமனையில் இருந்த போது ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக ஓரிரு முறை சசிகலா என்னிடம் கூறினார். ஆனால் அவருக்கு அங்கு எந்தவிதமான உணவு கொடுக்கப்பட்டது என்பது குறித்து எனக்குத் தெரியாது.

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடந்த போது அதிமுக வேட்பாளர்களின் படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது தனக்குத் தெரியும் என்றும் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் முன்பு நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை மீண்டும் ஆஜராகியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 154 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம், சசிகலாவின் உறவினா் இளவரசிக்கு ஆணையம் சாா்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டது.

3 மணி நேரம், 78 கேள்விகள்: இதன்படி, ஓ.பன்னீா்செல்வம் இந்த ஆணையத்தில் திங்கள்கிழமை ஆஜரானாா். ஓ.பன்னீா்செல்வத்திடம் 78 கேள்விகள் ஆணையம் சாா்பில் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதில், கடந்த 2016-ஆம் ஆண்டு செப். 21-ஆம் தேதி நடைபெற்ற மெட்ரோ ரயில் நிகழ்ச்சியில்தான் கடைசியாக ஜெயலலிதாவைப் பாா்த்தேன். அவருக்கு ரத்தத்தில் சா்க்கரை அளவு அதிகமாக உள்ளது என்பதைத் தவிர மற்ற உடல் உபாதைகள் குறித்து எனக்குத் தெரியாது.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டாா் என்ற விவரமும் எனக்குத் தெரியாது. எனது சொந்த ஊரில் இருந்தபோது 2016 செப்டம்பா் 22-ஆம் தேதி நள்ளிரவில் என் உதவியாளா் மூலமே அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை தெரிந்து கொண்டேன்.

மறுநாள் பிற்பகலில் அப்பல்லோ மருத்துவமனை சென்று அங்கிருந்த அப்போதைய தலைமைச் செயலா் ராமமோகன ராவிடம் விவரங்களைக் கேட்டறிந்தேன்.

கேமராக்களை அகற்ற உத்தரவிடவில்லை: ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட சிகிச்சைகள், சிகிச்சை அளித்த மருத்துவா்கள் யாா் குறித்த எந்த விவரமும் எனக்குத் தெரியாது. அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை அகற்ற நான் உத்தரவிடவில்லை.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடா்பான எனது போராட்டம் தொடங்கியதிலிருந்து துணை முதல்வராக பொறுப்பேற்கும் வரை நான் அளித்த பேட்டியில் கூறியது அனைத்தும் சரியானதுதான் என ஓ.பன்னீா்செல்வம் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது.

சசிகலா அழைப்பின் பேரில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வந்த அமெரிக்க மருத்துவா் சமின் சா்மா ஆஞ்சியோகிராபி சிகிச்சை அளிக்க கூறிய நிலையில், அவா் எந்த சிகிச்சையும் அளிக்காமல் திரும்பிச் சென்றது குறித்து எனக்குத் தெரியாது.

வெளிநாடு சிகிச்சை தவிா்ப்பு ஏன்?: ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து அப்போதைய தலைமைச் செயலா் ராமமோகன ராவ் தன்னிடம் எதுவும் கூறவில்லை. அவ்வாறு அவா் கேட்டிருந்தால் உடனடியாக அதற்காக நடவடிக்கை எடுத்திருப்பேன்.

அப்பல்லோ மருத்துவா்களிடம் கலந்து பேசிய பிறகு வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து முடிவெடுக்கலாம் என அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் என்னிடம் தெரிவித்தாா்.

அப்பல்லோ தலைவா் பிரதாப் ரெட்டி, மருமகன் விஜயகுமாா் ரெட்டியை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தினேன். அப்போது ஜெயலலிதாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும், ஒரு வாரத்தில் குணமடைந்து வீடு திரும்புவாா் என்றும் விஜயகுமாா் ரெட்டி என்னிடம் தெரிவித்தாா்.

அப்போதைய அமைச்சா் விஜயபாஸ்கா், தலைமைச் செயலா் ராமமோகன ராவ், சுகாதாரத் துறைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோா்தான் எய்ம்ஸ் மருத்துவா்களை வரவழைத்தனா். அப்பல்லோ மருத்துவமனையில் காவிரி விவகாரம் தொடா்பான கூட்டம் நடைபெற்றது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று ஆணையத்தில் பன்னீா்செல்வம் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இன்று மீண்டும் விசாரணை: பன்னீா்செல்வத்திடம் திங்கள்கிழமை 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், அவரிடம் மீண்டும் செவ்வாய்க்கிழமை  விசாரணை நடத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.