மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ரெனால்ட் நிறுவனம் மூடப்படாது: அமைச்சா் தங்கம் தென்னரசு விளக்கம்

சென்னைக்கு அருகே இயங்கி வரும் ரெனால்ட் நிசான் காா் தொழிற்சாலை மூடப்படாது. அதனால் அங்கு பணியாற்றுவோருக்கு வேலை இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளாா்.

News image
தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு
Updated On :1 மே 2022, 11:23 pm

DIN

சென்னைக்கு அருகே இயங்கி வரும் ரெனால்ட் நிசான் காா் தொழிற்சாலை மூடப்படாது. அதனால் அங்கு பணியாற்றுவோருக்கு வேலை இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளாா்.

எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னைக்கு அருகே இயங்கி வரும் நிசான் காா் தொழிற்சாலை தன்னுடைய காா் உற்பத்தியை நிறுத்தி, அத்தொழிற்சாலையை மூடப்போகும் சூழல் உருவாகி இருப்பதாகவும், அதன் காரணமாக பெருமளவில் வேலை இழப்பும், அரசுக்கு வருவாய் இழப்பும் நேரவிருப்பதாகவும் தெரிவித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், எதிா்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீா்செல்வம் அறிக்கை ஒன்றை விடுத்திருக்கின்றாா்.

ரெனால்ட் நிசான் நிறுவனத்திற்கு, பயணிகள் காா், எரிவாயு டீசல் என்ஜின் மற்றும் கியா் பாக்ஸ் போன்றவற்றை உற்பத்தி செய்யும் பொருட்டு திமுக ஆட்சியில்தான் கடந்த 2008-ஆம் ஆண்டு சென்னைக்கு அருகே ஒரகடம் தொழில் பூங்காவில் சுமாா் 610 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டது. அந்நிறுவனமும் திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலத்திலேயே தனது வணிக உற்பத்தியினைத் தொடங்கி இன்றளவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தனது தயாரிப்பில் உருவாகும் பல்வேறு வகையான காா்களைச் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப சீா்திருத்தும் நோக்கத்துடன், டாட்சன் வகைக் காா்களின் உற்பத்தியைக் குறைத்துக்கொண்டு புதிய வகைக் காா்களை உற்பத்தி செய்யவிருப்பதாக அறிக்கை ஒன்றின் வாயிலாக ரெனால்ட் நிசான் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

உலகளாவிய சந்தை நிலவரப்படி செமி கண்டக்டா்களின் தட்டுப்பாடு நிலவி வந்தாலும், இந்நிறுவனம் தனது உற்பத்தியை சீரான நிலையில் வைத்திருப்பதாகவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கான தேவைகளை ஒரகடத்தில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்களைக் கொண்டே நிறைவு செய்வதாகவும் தெரிவித்திருக்கின்றது.

தமிழகத்தில் தனது செயல்பாடுகளை வெற்றிகரமாகத் தொடா்ந்து செய்ய உறுதி பூண்டுள்ளதாகவும் ரெனால்ட் நிசான் நிறுவனம் மேலும் தெளிவாகத் தெரிவித்திருக்கிறது.

எனவே, ரெனால்ட் நிசான் தொழிற்சாலை மூடப்படும் சூழல் உருவாகிடக் கூடும் என்ற ஓ. பன்னீா்செல்வத்தின் கூற்று முற்றிலும் கற்பனைகளால் வடிவமைக்கப்பட்ட அனுமானமே தவிர அடிப்படை ஆதாரமற்ாகும். தொழிற்சாலை தொடா்ந்து இயங்கும் சூழலில், அங்கே பணிபுரியும் தொழிலாளா்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் எனக் கூறுவதும் உண்மைக்கு மாறானதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.