அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வணிக உரிமம்; முதல்வர் அறிவிப்பு

வணிக நிறுவனங்கள் இனி 3 ஆண்டுக்கு ஒருமுறை உரிமை பெற்றால் போதும் என்று  திருச்சி வணிகர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

News image
Updated On :5 மே 2022, 10:02 am

DIN

திருச்சி: வணிக நிறுவனங்கள் இனி 3 ஆண்டுக்கு ஒருமுறை உரிமை பெற்றால் போதும் என்று  திருச்சி வணிகர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Story image

திருச்சி வணிகர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

வணிகர்களுக்கு சாதகமாக ஜிஎஸ்டி மன்றத்தில் வரிச்சலுகைகளையும், சில வரிகள் கைவிடுதலையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதுவரை 65 வரிகளை மாநில அரசு கைவிட்டுள்ளது.

Story image

தீ விபத்தால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.5000 வழங்கப்பட்டடு வந்தது. அது இனி ரூ.20,000 மாக வழங்கப்படும்.  வணிகர் உயிரிழந்தால் நலவாரியம் சார்பில் வழங்கப்பட்டுவந்த ரூ.1 லட்சம் இழப்பீடு, இனி ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

Story image

வணிக நிறுவனங்கள் இனி 3 ஆண்டுக்கு ஒருமுறை உரிமை பெற்றால் போதும். இனி உடற்பயிற்சி கூடங்களுக்கு காவல் உரிமம் தேவையில்லை. 

Story image

சாலை விரிவாக்கத்தின் போது பாதிக்கப்படும் வணிகர்களுக்கு, உள்ளாட்சி அமைப்பு வாடகை கட்டிடங்களை வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும். அரசு கட்டடங்களில் வணிகர்களுக்கு வாடகை நிர்ணயம் செய்ய தனியாக கமிட்டி அமைக்கப்படும். 

Story image

வணிகர் நல வாரியத்தை மேம்படுத்த பேரமைப்பு நிர்வாகிகளை கொண்ட புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். திமுக ஆட்சி எப்போதும் வணிகர் நலன் பேணும் அரசாக இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.