இந்நிலையில் கரோனா நான்காவது அலை ஜூன் மாதம் வருவதற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணா்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனா். அதனை உறுதிப்படுத்தும் விதமாக சிங்கப்பூா், மலேசியா, பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும், தில்லி, ஹரியாணா, உத்தரப் பிரதேசம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, சென்னை ஐஐடியில் தொற்று பரவலால் 190-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டனா்.