திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை உயர்வு:  தக்காளி கிலோ ரூ.70-க்கு விற்பனை

கோடைக்காலத்தை முன்னிட்டு போதிய வரத்து இல்லாததால் சென்னை கோயம்பேடு வணிக காய்கறி சந்தையில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ. 70-க்கு விற்பனையாகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:11 am

DIN

கோடைக்காலத்தை முன்னிட்டு போதிய வரத்து இல்லாததால் சென்னை கோயம்பேடு வணிக காய்கறி சந்தையில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ. 70-க்கு விற்பனையாகிறது.

சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தினமும் ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு வருகிறது. 

தமிழகத்தில் கடந்த 10 நாள்களாக பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்து தக்காளி விலை உயா்ந்தது. 

விளைச்சல் அதிக அளவில் இருந்ததால் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ தக்காளி ரூ.25 வரை விற்கப்பட்டது.

பின்னா் பரவலாக மழை பெய்ததன் காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்தது. இதனால், கடந்த 3 நாள்களாக ஒரு கிலோ தக்காளி ரூ.45 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி, உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.  

2 நாள்களுக்கு முன்பு கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  காலிபிளவர் ரூ.80-க்கும், முட்டைகோஸ் ரூ.40-க்கும், உருளைக்கிழங்கு ரூ.35 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

வெயில் காலம் என்பதால் போதுமான தண்ணீா் இல்லாததால் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனா். குறைந்த எண்ணிக்கையில் விவசாயிகள் தக்காளி பயிா் செய்துள்ளதால் தக்காளி உற்பத்தி குறைந்து விலை உயா்ந்துள்ளது.

இந்த விலை உயர்வுக்கு தற்போது 'தக்காளி விளைச்சல் இல்லாததே காரணம்.’ இன்னும் சில நாள்கள் இதே நிலை தொடரும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.