ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

100% முதல் தவணை தடுப்பூசி செலுத்த இலக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில்  100 சதவீத முதல் தவணை கரோனா  தடுப்பூசி  செலுத்த இலக்கை அடைய  திட்டமிட்டுள்ளதாக தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

News image

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்(கோப்புப்படம்).

Updated On :9 மே 2022, 8:23 am

DIN

சென்னை: தமிழகத்தில்  100 சதவீத முதல் தவணை கரோனா  தடுப்பூசி  செலுத்த இலக்கை அடைய  திட்டமிட்டுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை வரை தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 93.44 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

81.55 சதவீதம் பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். தமிழகத்தில் செப்டம்பர் 12, 2021 முதல்  நடைபெற்ற 28 மெகா தடுப்பூசி முகாம்களின் மூலம் மொத்தம் 4.12 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, 17 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 12-14 வயதுக்குட்பட்டவர்களில் 81.3 சதவீதம் பேர் முதல் தவணை  செலுத்தியுள்ளனர் மற்றும்  இரண்டாவது தவணை 9,42,469 அல்லது 44 சதவீதம் பேர் செலுத்தியுள்ளனர் என்று  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15-18 வயதுக்குட்பட்டவர்களில், 29,69,353 அல்லது 88.74 சதவீதம் பேர் முதல் தவணையையும், 23,55,808 அல்லது 70.41 சதவீதம் பேர் இரண்டாவது தவணையையும் செலுத்துயுள்ளனர் என்று  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியுடைய அனைவருக்கும் 100 சதவீத முதல் தவணை தடுப்பூசி இலக்கை அடைய அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட மருத்துவ அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். தடுப்பூசி போடாதவர்கள் குறித்து வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தி தடுப்பூசி போட சுகாதாரப் பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஐ.ஏ.என்.எஸ். செய்தியாளர்களிடம்  கூறியதாவது: "தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசிகளின் முதல் தவணை செலுத்தும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது, மேலும் தகுதியான மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான பிரசாரம் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது." என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.