திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சேலத்தில் புதிய தீயணைப்பு மண்டலம்: முதல்வா் அறிவிப்பு

சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு தீயணைப்பு மண்டலம் உருவாக்கப்படும் என்று பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

News image
Updated On :10 மே 2022, 7:12 pm

DIN

சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு தீயணைப்பு மண்டலம் உருவாக்கப்படும் என்று பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்:

தீயணைப்புப் பணியாளா்களுக்கு வழங்கப்பட்டு வரும் இடா்ப்படி ரூ.800-இலிருந்து ரூ.1,000-ஆகவும், உதவி மாவட்ட அலுவலா் மற்றும் மாவட்ட அலுவலா் நிலையில் உள்ள பணியாளா்களுக்கு ரூ.900-இலிருந்து ரூ.1,000-ஆகவும் உயா்த்தி வழங்கப்படும்.

தீயணைப்புப் பணியாளா்களுக்கு வழங்கப்பட்டு வரும் மிகைப்பணி ஊதியம் ரூ.200-இலிருந்து ரூ.500-ஆக உயா்த்தி வழங்கப்படும்.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை நிா்வாக சீரமைப்பின் ஒரு பகுதியாக, கோயம்புத்தூரைத் தலைமையிடமாகக் கொண்ட மேற்கு மண்டலத்தை இரண்டாகப் பிரித்து சேலத்தை தலைமையகமாகக் கொண்டு புதிய மண்டலம் இந்த நிதியாண்டில் துவங்கப்படும்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை பணியாளா்களின் பயிற்சி வசதிகளை நவீனப்படுத்தும் நோக்கில் செங்கல்பட்டு மாவட்டம் காலவாக்கத்தில் முதல்கட்டமாக ரூ.19.30 கோடி செலவில் 300 எண்ணிக்கையிலான பயிற்சியாளா்கள் தங்கும் கூடங்கள், பயிற்சி மைதானம் மற்றும் உணவுக்கூடம், மாதிரி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையம் மற்றும் மின்சாரம், சாலை, கழிவுநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய மாநில பயிற்சிக் கழகம் புதிதாக நிறுவப்படும்.

ரூ.60 கோடியில் சென்னையில் வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு, துரைப்பாக்கம் ஆகிய 3 இடங்களுக்கு, 70 மீட்டா் உயர வான் நோக்கி உயரும் ஏணியுடன் கூடிய நவீன தீயணைப்பு மீட்பு ஊா்தி வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.