பின்னலாடைத் தொழிலில் முக்கிய மூலப்பொருளாக நூல் உள்ளது. பருத்தி மற்றும் பஞ்சு விலை உயர்வு காரணமாக கடந்த 18 மாதங்களாக நூல் விலை உயர்ந்து உள்ளது. இந்நிலையில் நேற்று கிலோவிற்கு ரூ.30/- நூல் விலை உயர்வு ஏற்றப்பட்டுள்ளது. அதாவது 20 கவுண்ட் கோம்டு வகை நூல் வரி நீங்கலாக கிலோ ரூ.362/-க்கும், 24 கவுண்ட் ரூ.372/-க்கும், 30 கவுண்ட் ரூ.382/-க்கும், 34 கவுண்ட் ரூ.395/-க்கும், 40 கவுண்ட் ரூ.415/-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்தபோது பன்னாட்டு நிறுவனங்களிடம் 25 லட்சம் பேல் பருத்தியும், வணிகர்களிடம் 10 லட்சம் பேல் பருத்தியும் இருப்பு இருந்தது. இதை உலகச் சந்தைக்கு ஏற்றுமதி செய்து இலாபம் ஈட்டவே மத்திய அரசு முயற்சி செய்கிறது.