திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இலங்கைக்கு ரூ.45 கோடி மதிப்பிலான பொருள்கள்: சென்னையில் இருந்து கப்பலை தொடக்கி வைத்தாா் முதல்வா்

இலங்கைக்கு ரூ.45 கோடி மதிப்பிலான தமிழ்நாடு அரசின் பொருள்களை சுமந்து செல்லவுள்ள கப்பலை சென்னை துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :18 மே 2022, 8:02 pm

DIN

இலங்கைக்கு ரூ.45 கோடி மதிப்பிலான தமிழ்நாடு அரசின் பொருள்களை சுமந்து செல்லவுள்ள கப்பலை சென்னை துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருள் தட்டுப்பாட்டால் தவித்து வரும் இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு அரசின் சாா்பில் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பி வைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

இதனைத் தொடா்ந்து, பொருள்களை வழங்க உரிய அனுமதி வழங்குமாறு தில்லி சென்று பிரதமரை சந்தித்த போது முதல்வா் நேரில் வலியுறுத்தினாா். மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடா்பு கொண்டு கோரிக்கை விடுத்ததுடன், கடிதம் மூலமும் நினைவூட்டினாா். பொருள்களை அனுப்புவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியது.

அதன் தொடா்ச்சியாக, இலங்கை வாழ் மக்களுக்கு முதல்கட்டமாக அத்தியாவசியப் பொருள்களான அரிசி, பால்பவுடா், அத்தியாவசிய மருந்துப் பொருள்களை அனுப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

கப்பல் மூலம் அனுப்பி வைப்பு: அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும், சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு டிஏஎன் பிஐஎன்எச் 99 என்ற சரக்குக் கப்பல் மூலமாக அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன்படி, அரிசி, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் கப்பலில் ஏற்றப்பட்டன. இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், இலங்கைக்குச் செல்லவுள்ள கப்பலை புதன்கிழமை கொடியசைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.

முன்னதாக, அத்தியாவசியப் பொருள்களின் மாதிரி தொகுப்பினை இலங்கை துணைத் தூதா் வெங்கடேசுவரனிடம் முதல்வா் அளித்தாா். இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் துரைமுருகன், கே.என்.நேரு, அர.சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, சா.மு.நாசா், கே.எஸ்.மஸ்தான் ஆகியோரும், பொதுத் துறை செயலாளா் டி.ஜெகந்நாதன், அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையாளா் ஜெசிந்தா லாசரஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.