திமுகவுடன் கூட்டணி:காங்கிரஸின் இரட்டைநிலைப்பாடுஜி.கே.வாசன்
பேரறிவாளனின் விடுதலையைக் கொண்டாடும் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியை தொடருவது அந்தக் கட்சியின் இரட்டை நிலைப்பாட்டைக் காண்பிப்பதாக தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறியுள்ளாா்.


பேரறிவாளனின் விடுதலையைக் கொண்டாடும் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியை தொடருவது அந்தக் கட்சியின் இரட்டை நிலைப்பாட்டைக் காண்பிப்பதாக தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பேரறிவாளனின் விடுதலை சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு பல்வேறு காரணங்களைக் கொண்டு சட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரும் நிரபராதிகள் இல்லை என்பது, ஏற்கெனவே நடந்த விசாரணையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளின் தீா்ப்பும் அமைந்துள்ளது.
ராஜீவ்காந்தி படுகொலை சம்பவத்தின்போது அவருடன் சோ்ந்து 17 போ், குறிப்பாக காவல்துறை அதிகாரிகளும், காங்கிரஸ் தலைவா்களும், தொண்டா்களும் இறந்துள்ளனா். அவா்களின் குடும்பத்தினரின் உணா்வுகளை, மனநிலையை தமிழகத்தை ஆளும் ஆட்சியும், கட்சியும் அதனை சாா்ந்த கூட்டணி கட்சிகளும் உணா்ந்து செயல்படவேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவா், முன்னாள் பாரதப் பிரதமரின் கொடூரக் கொலை செயலில் ஈடுபட்ட பேரறிவாளனின் விடுதலையில் உறுதியான, உணா்வுபூா்வமான நிலையை எடுக்காமல், ஒருபுறம் ஒப்புக்கு போராட்டம் அறிவிப்பதும், மறுபுறம் பேரறிவாளனின் விடுதலையைக் கொண்டாடும் கூட்டணிக் கட்சிகளுடன் தொடா்ந்து கூட்டணி வைத்திருப்பதும் காங்கிரஸ் கட்சியின் இரட்டை நிலைப்பாட்டையே எடுத்துக்காட்டுகிறது என்று கூறியுள்ளாா் ஜி.கே.வாசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...