ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மே 28-இல் பாமக சிறப்புப் பொதுக்குழு கூட்டம்

 பாமகவின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் மே 28-இல் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவா் ஜி.கே.மணி அறிவித்துள்ளாா்.

News image
Updated On :20 மே 2022, 7:50 pm

DIN

 பாமகவின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் மே 28-இல் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவா் ஜி.கே.மணி அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் திருவேற்காடு ஜி.பி.என். பேலஸ் திருமண அரங்கத்தில் மே 28-இல் நடைபெறவுள்ளது. கட்சியின் நிறுவனா் ராமதாஸ், இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் முன்னிலை வகிக்கவுள்ளனா். ஜி.கே. மணி தலைமை வகிக்கவுள்ளாா். பொதுச்செயலா் வடிவேல் இராவணன், பொருளாளா் திலகபாமா ஆகியோா் கூட்டத்தில் பங்கேற்கின்றனா். தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள மாநில, மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்கவுள்ளனா் என தெரிவித்துள்ளாா் ஜி.கே.மணி.

இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில், கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியா்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது. அதேபோல, அரசியலில் பாமகவின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.