அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்த முறை தவறாமல் கடைபிடிக்கப்பட்டு வந்தது.
திமுக அரசு ஆட்சி அதிகாரத்தில் அமருவதற்கு முன்பு "பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்", "அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றுவோருக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்", "80 வயதுக்கு மேல் 20 சதவிகிதமாக உயர்த்தி வழங்கப்பட்ட ஓய்வூதியம் 70 வயதுக்கு மேல் 10 சதவிகிதமாகவும், 80 வயதுக்கு மேல் 10 சதவிகிதமாகவும் உயர்த்தி வழங்கப்படும்" என்றெல்லாம் வாக்குறுதி அளித்துவிட்டு, இன்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்ததும் அவற்றையெல்லாம் காற்றில் பறக்கவிட்டதோடு மட்டுமல்லாமல், "அகவிலைப்படி உயர்வை தாமதமாக வழங்குவது", "ஈட்டிய விடுப்பினை ஒப்படைப்பு செய்து பணம் பெற்றுக் கொள்வதை நிறுத்துவது", "கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கான அகவிலைப்படி உயர்வை நிறுத்துவது" என்ற வரிசையில் தற்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திலிருந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் 14 சதவிகித அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.