தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

திருவள்ளூர் அருகே சரக்கு லாரியில் தீ விபத்து: ரூ.1 கோடி பொருள்கள் எரிந்து நாசம்

திருவள்ளூர் அருகே சரக்கு லாரியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது. 

News image
தீ விபத்தில் எரிந்து நாசமான ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள்
Updated On :26 மே 2022, 6:21 am

DIN

திருவள்ளூர் அருகே கன்டெய்னர் சரக்கு லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து நாசமான சம்பவம் தொடர்பாக மணவாளநகர் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் அருகே போலிவாக்கம் பகுதியில் தனியார் ஆன்லைன் பொருள்கள் விற்பனை செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆர்டர் செய்த சுமார் ஒரு கோடி மதிப்பிலான பொருள்களை கண்டெய்னர் சரக்கு லாரியில் ஏற்றிக் கொண்டு போலிவாக்கத்திலிருந்து சாலை மார்க்கமாக புதுதில்லி நோக்கி வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. 

இந்த நிலையில் திருவள்ளூர்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வெங்கத்தூர் அருகே சென்ற போது கண்டெயினர் லாரியிலிருந்து புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த ஓட்டுநர் லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு காவல்துறை, தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருவள்ளூர் துணைக் கண்காணிப்பாளர் சந்திரதாசன், காவல் ஆய்வாளர் நடராஜன் மற்றும் மணவாளநகர் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்றனர். லாரியை திறந்து பார்த்தபோது உள்ளே தீப்பற்றி மளமளவென எரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து திருவூர் மற்றும் திருவள்ளூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தினால் கண்டெய்னர் சரக்கு லாரியில் இருந்த ஆர்டர் செய்த ரூ.1 கோடி மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்கள் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமான சம்பவம் தொடர்பாக மணவாளநகர் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆன்லைனில் ஆர்டர் செய்த வீட்டு உபயோக பொருள்கள் கொண்டுசெல்லும் போது கண்டெய்னர் லாரியில் ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.