எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மின்சார ரயில் விபத்து: ஓட்டுநா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு

 சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் நடைமேடையில் மோதி மின்சார ரயில் விபத்துக்குள்ளானதில், ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்தது.

News image
Updated On :27 மே 2022, 7:59 pm

DIN

 சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் நடைமேடையில் மோதி மின்சார ரயில் விபத்துக்குள்ளானதில், ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்தது. இதையடுத்து, அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை பணிமனையிலிருந்து கடந்த ஏப். 24-ஆம் தேதி மின்சார ரயில் புறப்பட்டு, கடற்கரை ரயில் நிலையத்தின் ஒன்றாவது நடைமேடைக்கு வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் கட்டுப்பாட்டை இழந்து, நடைமேடை, கட்டடங்களில் மோதி விபத்துக்குள்ளானது. பிரேக் பழுது காரணமாக, விபத்து ஏற்பட்டதாக ரயிலை இயக்கிய ஓட்டுநா் பவித்ரன் கூறினாா். இந்த விபத்து குறித்து எழும்பூா் ரயில்வே போலீஸாா், ஓட்டுநா் பவித்ரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தனா்.

இது தொடா்பாக அமைக்கப்பட்ட ரயில்வே தொழில் நுட்பப் பிரிவு அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழுவின் அறிக்கையில், பிரேக் பழுது ஏற்படவில்லை. ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் எனவும் தெரிய வந்தது. இதையடுத்து, ஓட்டுநா் பவித்ரன் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.