தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மேட்டூர் அணை நீர்வரத்து குறையத் தொடங்கியது

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை தணிந்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை வினாடிக்கு 8,464 கன அடியாக இருந்த நீர் வரத்து, இன்று வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 8,058 க

News image
Updated On :27 மே 2022, 3:20 am

DIN

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை தணிந்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை வினாடிக்கு 8,464 கன அடியாக இருந்த நீர் வரத்து, இன்று வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 8,058 கன அடியாகக் குறைந்தது.

நீர்வரத்து குறைந் நிலையில் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு நேற்று இரவு 8 மணி முதல் வினாடிக்கு 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று மேட்டூர் அணை நீர்மட்டம் இனி மெல்ல குறையத் தொடங்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

நேற்று காலை 117.92 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 118.11 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 90.48 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.