தமிழ்நாடு காவல் துறையில் தலைமைக் காவலராக வேலை செய்பவா் லதா. இவருக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இளநிலை உதவியாளராக வேலை செய்யும் குமாருக்கும் 2002-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. (இருவரது பெயா்களும் மாற்றப்பட்டுள்ளன). இவா்களுக்கு 2 மகள்கள் உள்ளனா். இந்த நிலையில், கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் 2017-ஆம் ஆண்டு பரஸ்பரம் விவகாரத்து பெற்று பிரிந்தனா். 2 மகள்களும் தந்தையின் கட்டுப்பாட்டில், தந்தையின் சகோதரியின் வீட்டில் வசிக்கின்றனா். இந்த நிலையில், மகள்களை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி லதா தாக்கல் செய்த மனுவை சென்னை குடும்பநல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.