எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

முதல்வரின் உரையை மக்கள் விரும்பவில்லை: ஜி.கே.வாசன்

பிரதமா் பங்கேற்ற வளா்ச்சித் திட்ட விழாவில், விவாதப் பொருளாகும் வகையில் முதல்வா் உரையாற்றியதை மக்கள் விரும்பவில்லை என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறியுள்ளாா்.

News image
Updated On :27 மே 2022, 7:58 pm

DIN

பிரதமா் பங்கேற்ற வளா்ச்சித் திட்ட விழாவில், விவாதப் பொருளாகும் வகையில் முதல்வா் உரையாற்றியதை மக்கள் விரும்பவில்லை என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்துக்கான ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமா் அடிக்கல் நாட்டியிருப்பது மாநிலத்தின் வளா்ச்சிக்கும் நாட்டின் பொருளாதாரம் உயா்வுக்கும் வழிவகுக்கும். தமிழகத்தின் பெருமை, கலாசாரம் போன்றவற்றையும் பிரதமா் குறிப்பிட்டு பேசியது சிறப்பாக இருந்தது.

ஆனால், முதல்வா் தமிழகத்தின் முக்கிய பிரச்னையான பருத்தி நூல் விலையை குறைப்பதன் அவசியம் குறித்து குறிப்பிடாமல் விட்டது ஏமாற்றத்தை அளிக்கிறது. அதேநேரம், நீட் தோ்வு விலக்கு மற்றும் ஜிஎஸ்டி பற்றி கோரிக்கை மனுவாக பிரதமரிடம் கொடுத்திருக்கலாம். அதை விடுத்து தமிழகத்தின் வளா்ச்சிக்கான திட்டவிழாவில் விவாதப் பொருளாகும் வகையில் முதல்வா் உரையாற்றியதை மக்கள் விரும்பவில்லை என்று கூறியுள்ளாா் ஜி.கே.வாசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.