கடந்த ஓராண்டு காலத்தில் 186 திருக்கோயில்களில் திருப்பணிகள் முடிவுற்று குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் ரூ.662 கோடி செலவில் 2021- 2022 ஆண்டுக்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ரூ.1,000 கோடி செலவில் 1500 திருப்பணிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1,250 கிராமப்புற திருக்கோயில்கள், ஆதிதிராவிடா் வசிக்கின்ற பகுதியிலே உள்ள திருக்கோயில்களை தலா ரூ. 2 லட்சத்தில் புனரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும். கடந்த ஏப். 31-ஆம் தேதி நிலவரப்படி திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.2,600 கோடி சொத்துகளை இந்து சமய அறநிலையத்துறை மீட்டுள்ளது என்றாா் அவா்.