தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கே மீண்டும் அடிக்கல்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களே பிரதமா் மோடியால் மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினாா்.

News image
Updated On :27 மே 2022, 8:03 pm

DIN

காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களே பிரதமா் மோடியால் மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னையில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்து உரையாற்றியுள்ளாா்.

சென்னை துறைமுகத்தையும், மதுரவாயலையும் இணைக்கும் நான்கு வழி இரண்டடுக்கு சாலையின் செயல்திட்ட மதிப்பான ரூ.5,852 கோடி செலவில் 21 கி.மீ. தொலைவு சாலை அமைப்பதற்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டியிருக்கிறாா். இதே திட்டம் ரூ.1,655 கோடி மதிப்பீட்டில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே அமைத்திட 2009 ஜனவரி 8-இல் முதல்வராக இருந்த கருணாநிதி முன்னிலையில், பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. 30 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் பொருந்தாதக் காரணம் கூறி, அந்தத் திட்டத்தை ஜெயலலிதா முடக்கிவிட்டாா். இந்தத் திட்டத்துக்கு மீண்டும் அடிக்கல் நாட்டியிருப்பது மிகுந்த வியப்பை தருகிறது.

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மூன்றாவது ரயில் வழித்தடம், மதுரை - தேனி ரயில் வழித்தடம் திட்டம் போன்றவையும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பரிசீலனையில் இருந்து தொடக்க வேலைகள் நடைபெற்று வந்தவையாகும். சென்னை - பெங்களூா் விரைவு வழிச்சாலை திட்டமும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன்பின் முடக்கப்பட்டது என்பதை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளாா் கே.எஸ்.அழகிரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.