தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஜூன் 13 முதல் மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஜூன் 13 முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஜூன் 13 முதல் மாணவர் சேர்க்கை
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஜூன் 13 முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

ஜூன் மாதம் 13-ஆம் தேதி 1 முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். ஜூன் 20-ஆம் தேதி பிளஸ் 2 வகுப்புக்கும், ஜூன் 27-ஆம் தேதி பிளஸ் 1 வகுப்புக்கும் வகுப்புகள் தொடங்கப்படும். 

இந்நிலையில், வரும் கல்வியாண்டில் புதிய மாணவர் சேர்க்கை வரும் ஜூன் 13ஆம் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. 

கடந்த ஆண்டுகளில் பள்ளி திறப்புக்கு முன்பே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில், வரும் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகே புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com