மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

மதுரை மேலூர் அருகே நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழா (விடியோ)

மேலூர் அருகே மேலவளவில் நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்று நாட்டுவகை மீன்களை பிடித்தனர்.

News image

மேலூர் அருகே மேலவளவில் நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழா

Updated On :28 மே 2022, 2:43 pm IST

மதுரை  மேலூர் அருகே மேலவளவில் நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்று நாட்டுவகை மீன்களை பிடித்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த மேலவளவு கருப்பு கோயிலுக்கு முன்பாக உள்ள பரம்பு கண்மாயில் ஒவ்வொரு ஆண்டும் மும்மாரி மழை பொழியவும் விவசாயம் செழிக்க வேண்டியும் பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் மேலவளவு சோமகிரி மழை அடிவாரத்தில் உள்ள பரம்பு கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா இன்று அதிகாலையில் நடைபெற்றது.

Story image

இன்று  நடைபெற்ற மீன்பிடித் திருவிழா குறித்து  மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் மேலூர் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்தனர். கிராமத்தினர் வெள்ளை வீசியதைத் தொடர்ந்து கரையில் வலை, கச்சா, ஊத்தா உள்ளிட்ட  மீன்பிடி உபகரணங்களுடன் தயாராக இருந்தோர் கண்மாய்க்குள் இறங்கி மீன்களை பிடிக்கத் துவங்கினர். 

இதில் கட்லா, ரோகு, விரால், கெளுத்தி, ஜிலேபி உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் அதிகளவில் கிடைத்ததால் மீன்பிடித் திருவிழாவில் பங்கேற்றவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பிடிபட்ட மீன்களை அவரவர் வீட்டிற்கு எடுத்துச்சென்று சமைத்து குடும்பத்துடன் உட்கொள்வதை இந்த பகுதி மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.