சென்னை மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வந்த நிலையில், இன்று காலை மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது.
நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 4 மணி வரை பதிவான மழை நிலவரம்:
சென்னையில் அதிகபட்சமாக வில்லிவாக்கத்தில் 10 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.
நுங்கம்பாக்கம் - 7.7 செ.மீ
நந்தனம் - 5.2 செ.மீ
பூந்தமல்லி - 4.5 செ.மீ
காரைக்கால் - 7.0 செ.மீ மழையும், நாகை - 4.5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மாலை தொடங்கிய மழை, தொடர்ந்து பெய்து வருகிறது.
இதையும் படிக்க: வடகிழக்குப் பருவமழை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
சென்னையின் புறநகர்ப் பகுதிகளான கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், வண்டலூர், மண்ணிவாக்கம், ஆவடி, ஊரப்பாக்கம், பள்ளிக்கரணை, சிட்லப்பாக்கம், பெரும்பாக்கம், கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.