10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் செய்யாததை நாங்கள் ஒரே ஆண்டில் செய்துள்ளோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை தமிழகம் முழவதும் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு பேசிய பொதுமக்களிடம், முதல்வர் மு.க.ஸ்டாலின் வாட்ஸ் ஆப் விடியோ அழைப்பு மூலம் குறைகளை கேட்டறிந்தார்.
இதையும் படிக்க: நவ,10-ல் ஒடிசா செல்கிறார் குடியரசுத் தலைவர் முர்மு!
பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் அதனை அப்புறப்படுத்தி வரிகிறோம். தமிழகம் முழவதும் கடந்த 10 ஆண்டகளாக மழை சேத்தால் சீரழிந்துள்ளது. இதை சரிசெய்ய 10 ஆண்டுகள் ஆகும். ஆனால் ஒன்றரை ஆண்டில் நாங்கள் சீரமைப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.