தஞ்சாவூர்: திருச்சிற்றம்பலத்தில் மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கக்கோரி 500-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி மாட்டுவண்டி தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள திருச்சிற்றம்பலம் பகுதியில் மாட்டுவண்டியில் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கவில்லை எனக் கூறி 500-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளை திருச்சிற்றம்பலம் கடைவீதியில் சாலையில் நிறுத்தி மாட்டுவண்டி தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பட்டுக்கோட்டை- மதுரை, பட்டுக்கோட்டை- புதுக்கோட்டை ஆகிய வழித்தடங்களில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சானியா-சோயிப் மாலிக் திருமண உறவில் விரிசல்?
தகவலறிந்து பட்டுக்கோட்டை டிஎஸ்பி பிரிதிவிராஜ் செளகான் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாட்டுவண்டி தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
தொடர்ந்து மாட்டுவண்டிகள் இந்த பகுதிக்கு வந்த வண்ணம் உள்ள நிலையில் மாட்டு வண்டிகள் அனைத்து சாலைகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டு திருச்சிற்றம்பலம் சாலைகள் மற்றும் கடைவீதிகள் முற்றுகையிடப்பட்டுள்ளதால் போலீசாருக்கும் மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது சுமூகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருந்தும் உடன்பாடு எட்டப்படாததால் தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


