சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கம்பம் நகராட்சி வாரச்சந்தை வளாகக் கிடங்கில்  தீ விபத்து

கம்பம் நகராட்சி வாரச்சந்தை வளாகக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து நாசமாகின. 

News image
கம்பம் நகராட்சி வாரச்சந்தை வளாகக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்புப் படையினர்.
Updated On :9 நவம்பர் 2022, 10:39 am

DIN

கம்பம்: கம்பம் நகராட்சி வாரச்சந்தை வளாகக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து நாசமாகின. 

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி வாரச்சந்தை வடபுறத்தில் 3 வளம் மீட்புப் பூங்கா கிடங்கு உள்ளது. நகர்ப்பகுதியில் சேகரமாகும் குப்பைகளில் இருந்து மக்கும், மக்கா குப்பை எனப் பிரித்தெடுத்து  மறுசுழற்சி செய்யக்கூடிய நெகிழி, செருப்பு, தண்ணீர் கேன் உள்ளிட்ட பொருட்களை  கிடங்கில் சேமித்து வைத்து பண்டல்களாக கட்டப்பட்டு மறுசுழற்சி மற்றும் சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. 

இந்நிலையில் புதன்கிழமை மதியம்  3-வது வளம் மீட்புப் பூங்கா கிடங்கில் இருந்து புகை வந்துள்ளது. இதனைப் பார்த்தவர்கள், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் ராஜலட்சுமி தலைமையில் தீயணைப்புப்படையினர் ஒரு மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நகர்மன்றத் தலைவர் வனிதா நெப்போலியன்,  சுகாதார அலுவலர் அரசகுமார்,  சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.

இதில் மின்கசிவின் காரணமாக கிடங்கில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்துள்ளதாக தெரிய வந்தது. குறிப்பிட்ட நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால் அருகில் உள்ள இதர 2 வளம் மீட்பு பூங்கா கிடங்கில் தீ பரவுவது தடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.