மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராணிப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பலி

ராணிப்பேட்டை அருகே 108 ஆம்புலன்ஸ் தற்காலிக ஓட்டுநர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்கு நியாயம் கேட்டு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  

News image
ராணிப்பேட்டை - பொன்னை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்.
Updated On :16 நவம்பர் 2022, 12:22 pm

DIN

ராணிப்பேட்டை அருகே 108 ஆம்புலன்ஸ் தற்காலிக ஓட்டுநர் தனியார் தொழிற்சாலையில் கிரேன் இயக்கியபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்கு நியாயம் கேட்டு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ராணிப்பேட்டை அடுத்த லாலாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன்(32). இவருக்கு திருமணமாகி யமுனா என்ற மனைவியும் 4 வயது மற்றும் 8 மாத ஆண் குழந்தை உள்ளனர்.

இவர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் தற்காலிக ஓட்டுநராகவும் மேலும் இரும்புத் தொழிற்சாலையில் உதிரிபாகம் ஏற்றி, இறக்கி வைக்கும் கிரேன் வாகனத்தையும் சொந்தமாக வைத்துள்ளார்.

ராணிப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி உயிரிழிந்த 108 ஆம்புலன்ஸ் தற்காலிக ஓட்டுநர் ஜெகதீஷ்.

ராணிப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி உயிரிழிந்த 108 ஆம்புலன்ஸ் தற்காலிக ஓட்டுநர் ஜெகதீஷ்.

இந்நிலையில் ராணிப்பேட்டை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும்  தனியார்  இரும்பு  தொழிற்சாலையில், இரும்பு உதிரி பாகங்களை கிரேன் மூலம் ஏற்றும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி ஜெகதீஷ் உயிரிழந்தார். 

தனியார் தொழிற்சாலையில் உயிரிழந்த ஜெகதீஷ் குறித்து முறையான தகவலை அவரது குடும்பத்திற்கு தொழிற்சாலை நிர்வாகம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது 

இதனால் ஆவேசமடைந்த அவரது உறவினர்கள் தொழிற்சாலை நிர்வாகத்தைக் கண்டித்து லாலாபேட்டை பேருந்து நிறுத்தம் எதிரே  ராணிப்பேட்டை - பொன்னை  சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதுகுறித்து  தகவல்  அறிந்து  அங்கு விரைந்து வந்த சிப்காட் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு  கலைந்து சென்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.