மேட்டூர் உபரிநீர் கால்வாயில் மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசுவதால் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேட்டூர் அணை நிரம்பிய பிறகு வரும் உபரி நீரை, அணையின் இடது கரையில் உள்ள உபரி நீர் போக்கி மூலம் வெளியேற்றப்படும். அவ்வாறு வெளியேற்றப்படும் உபரி நீர் கால்வாய் வழியாக சென்று சங்கிலி முனியப்பன் கோவில் அருகே மீண்டும் காவிரியில் கலக்கிறது.
மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் அவ்வப்போது வரும் உபரி நீரானது, உபரி நீர் போக்கி வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரிநீர் வெளியேறும் போது மேட்டூர் நீர் தேக்கத்தில் உள்ள மீன்கள் உபரி நீரில் அடித்துச் செல்லப்பட்டுகிறது.
உபரிநீர் நிறுத்தப்பட்டதும் கால்வாயில் உள்ள குட்டைகளில் தண்ணீர் தேங்கும். இந்த குட்டைகளில் அரஞ்சான், ஜிலேபி உள்ளிட்ட மீன்கள் இருக்கும்.
கடந்த இரண்டு நாள்களாக இப்பகுதியில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. உபரிகால்வாய் குட்டைகளில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன. சிறிய குட்டைகளில் அதிக அளவில் மீன்கள் இருப்பதாலும் வெப்பம் காரணமாகவும், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மீன்கள் செத்து மிதக்கலாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செத்து மிதக்கும் மீன்களை சிலர் அள்ளிச் சென்று விற்பனை செய்கின்றனர். இதேபோல் பலமுறை மீன்கள் செத்து மிதந்துள்ளன. அப்போது ஜிலேபி வகை மீன்கள் அதிக அளவில் செத்து மிதந்துள்ளன.
ஆனால் இன்று அரஞ்சான் மீன்கள் செத்து மிதக்கின்றன. ஆங்காங்கே மீன்கள் செத்து மிதப்பதால் உபரி நீர் கால்வாயின் இருகரைகளிலும் உள்ள குடியிருப்பு பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

”அட்லி படம் போல...!” அந்த மொழிதான் அவர்களுக்குப் புரியும்! முன்னாள் அமைச்சர் சிவசங்கர்

இரவு 10 மணிவரை 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
விஷால் இயக்கி நடிக்கும் மகுடம் படத்தின் முதல் பாடல்!

2-வது டெஸ்ட்: மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள்; 291 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



