நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

'குழந்தைகள் தந்தையிடம் இருப்பது சட்டவிரோதமல்ல': உயர் நீதிமன்றம் அதிரடி!

குழந்தைகள் தந்தையிடம் இருப்பது சட்டவிரோதம் ஆகாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :16 நவம்பர் 2022, 4:46 pm IST

குழந்தைகள் தந்தையிடம் இருப்பது சட்டவிரோதம் ஆகாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தனது 2 குழந்தைகளையும் மீட்டு தன்னிடம் ஒப்படைக்கக் கோரி மதுரையை சேர்ந்த துர்கா என்பவர் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

குழந்தைகளை யார் வைத்திருப்பது என்பது தொடர்பாக இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில், குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி பிரச்னையை முடித்துக் கொள்வதாக இரு தரப்பும் தெரிவித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை ஆட்கொணர்வு மனுவில் தீர்க்க இயலாது. சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெறலாம் எனக் கூறி வழக்கை  உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முடித்து வைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.