அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.
சென்னை, வியாசா்பாடியை சோ்ந்த பிரியா (17) சென்னை ராணிமேரி கல்லூரியில் விளையாட்டுப் பிரிவில் படித்து வந்தார். கால்பந்து போட்டியில், மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றவர்.
மூட்டு வலி காரணமாக, கொளத்தூா், பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியாவுக்கு, வலது கால் மூட்டுப்பகுதியில் ஜவ்வு விலகி உள்ளதாகக் கூறி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அதன் பின்னா் காலில் வீக்கம் ஏற்பட்டு உணா்விழப்பு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயா் சிகிச்சைக்காக பிரியா அனுப்பப்பட்டாா்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையின் அப்பெண்ணின் வலது காலில் ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டிருந்தது இருந்தது. உடல் முழுவதும் தொற்று பரவாமல் தடுக்க உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, வலது காலின் முழங்கால் பகுதிக்கு மேல் அகற்றப்பட்டது.
எனினும், உடல்நிலை மோசமடைந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பிரியா சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
இந்நிலையில், மாணவி பிரியாவின் வீட்டிற்கு இன்று காலை நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது, அரசு வேலைக்கான பணி ஆணை, நிவாரணத் தொகை உள்ளிட்டவை வழங்கினார்.
இந்த சந்திப்பின்போது, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.