தமிழகத்தில் தினசரி 4,500 பேர் வரை மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மெட்ராஸ் ஐ நோய்க்கு இதுவரை 1.50 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முறையாக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மெட்ராஸ் ஐ விரைந்து பரவும் தன்மையுடைய நோய் என்பதால் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் மக்கள் சுயமாக சிகிச்சை எடுக்கக் கூடாது. மெட்ராஸ் ஐ நோய் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. யாருக்கும் இதுவரை கண்பாதிப்பு ஏற்படவில்லை.
இதையும் படிக்க- அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு!எச்சரிக்கும் மருத்துவா்கள்
தமிழகத்தில் தினசரி 4,500 பேர் வரை மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்படுகின்றனர். மெட்ராஸ் ஐ பாதித்தால் குடும்ப நபர்களிடம் இருந்து தனிமைப்படுத்திக் கொள்வது நல்லவது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.