ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

முதல்வர் நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன்!

தமிழக முதல்வர் அரசு நிகழ்ச்சியில் எம்எல்ஏ, மேயர், அரசு அதிகாரிகள் மற்றும் திமுகவினர் பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்தனர்.

News image
Updated On :22 நவம்பர் 2022, 1:53 pm IST

தமிழக முதல்வர் அரசு நிகழ்ச்சியில் எம்எல்ஏ, மேயர், அரசு அதிகாரிகள் மற்றும் திமுகவினர் பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்தனர்.

தஞ்சாவூரில் மிகவும் பிரபலமான காமராஜ் மார்க்கெட் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மூலம் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை காலை 10 மணிக்கு தமிழக முதல்வர் திறந்து வைத்த நிலையில்,  முதல்வர் நிகழ்ச்சிக்காக  அங்கு வைக்கப்பட்டிருந்த பெரிய திரையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பொது வெளியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

இதனை எம்எல்ஏக்கள் நீலமேகம், சந்திரசேகரன், தஞ்சை மேயர் ராமநாதன் மற்றும் திமுகவினர் பொதுமக்கள் அமர்ந்து திரைப்படம் பார்த்து வருகின்றனர். இதனால் அரசு நிகழ்ச்சியில் நலத்திட்டங்களை தெரிவிக்காமல் திரைப்படம் பார்ப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.