6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அடுத்த 24 மணிநேரத்தில் புதிதாக வளிமண்டல சுழற்சி!

வங்கக் கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் புதிதாக வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.

News image
வானிலை ஆய்வு மையம்
Updated On :24 நவம்பர் 2022, 3:47 am

DIN

வங்கக் கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் புதிதாக வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், ஒரு வாரமாக வடதமிழக மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அடுத்த 4 நாள்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடக்கு அந்தமான் கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் புதிதாக வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.