டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: தாளாளர் மகன் புழல் சிறையில் அடைப்பு!

திருநின்றவூரில் பிளஸ் 2 படிக்கும் இரு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளரின் மகன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:56 am

DIN

திருநின்றவூரில் பிளஸ் 2 படிக்கும் இரு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளரின் மகன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே திருநின்றவூரில் தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இங்கு பிளஸ் 2 படிக்கும் இரு மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பதாகக் கூறி, பள்ளி தாளாளரின் மகன் வினோத் (34) பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை காலை 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வினோத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளிக்குள் உள்ளிருப்புப் போராட்டம், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

தகவலறிந்த பட்டாபிராம் சரக காவல் உதவி ஆணையர் சதாசிவம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாரும், மாவட்டக் கல்வி அலுவலர் (மெட்ரிகுலேசன்) ராதாகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

7 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற பேச்சின் முடிவில் வினோத் மீது நடவடிக்கை எடுக்க திருநின்றவூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில், போலீஸார் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வினோத் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில், தலைமறைவான வினோத்தை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். 

இந்நிலையில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளரின் மகன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

திருவள்ளூர் மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவை அடுத்து 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் வினோத். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.