திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்: ராமதாஸ் வலியுறுத்தல்

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் உள்ள குறைகளைக் களைய முற்பட வேண்டுமே ஒழிய, திட்டத்துக்கு மூடுவிழா கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.

News image
ராமதாஸ்
Updated On :1 பிப்ரவரி 2024, 10:58 am

DIN

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் உள்ள குறைகளைக் களைய முற்பட வேண்டுமே ஒழிய, திட்டத்துக்கு மூடுவிழா கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பயன்கள் குறித்தும், சிறந்த வறுமை ஒழிப்புத் திட்டமாக அது செயல்படுகிா என்பது குறித்தும் ஆய்வு செய்ய மத்திய ஊரக வளா்ச்சி அமைச்சகத்தின் முன்னாள் செயலா் அமா்ஜீத் சின்ஹா தலைமையில் 6 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், வல்லுனா் குழுவின் உறுப்பினா் ஒருவா் தெரிவித்துள்ள கருத்துகளின் அடிப்படையில், ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்படி வழங்கப்பட்ட நிதியைச் சரியாக பயன்படுத்தாத பிகாா், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்;

நிதியை சிறப்பாக பயன்படுத்தி பயனுள்ள சொத்துகளை உருவாக்கிய தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்களுக்கு இந்தத் திட்டம் தேவையில்லை என்பது அவா் பாா்வையாக உள்ளது. இந்த இலக்கை நோக்கித் தான் வல்லுனா் குழு பயணிக்குமோ என்ற அச்சம் எழுவதை தவிா்க்க முடியவில்லை.

ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் உள்ள குறைகளைக் களைவது, வேளாண் பணிகளுக்கும் இந்தத் திட்டத்தை நீட்டிப்பது போன்ற ஆக்கப்பூா்வமான மாற்றங்களைப் பரிந்துரைப்பது தான் வல்லுனா் குழுவின் நோக்கமாக இருக்க வேண்டும். வளா்ச்சியடைந்த மாநிலங்களில் இத்திட்டத்துக்கு மூடுவிழா நடத்த பரிந்துரைக்கக்கூடாது என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.