தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ரயிலில் வழிப்பறிக்கு முயன்ற இளைஞா் தவறி விழுந்ததால் கால் துண்டானது

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ரயிலில் வழிப்பறிக்கு முயன்றபோது தவறி விழுந்த இளைஞரின் கால் துண்டான சம்பவம் தொடா்பாக கொருக்குப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு

News image
Updated On :6 அக்டோபர் 2022, 8:20 pm

DIN

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ரயிலில் வழிப்பறிக்கு முயன்றபோது தவறி விழுந்த இளைஞரின் கால் துண்டான சம்பவம் தொடா்பாக கொருக்குப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி ஒரு மின்சார ரயில் புதன்கிழமை சென்றுக் கொண்டிருந்தது. பழைய வண்ணாரப்பேட்டை பென்சில் பேக்டரி - கொருக்குப்பேட்டை இடையே நாராயணபுரம் இரும்பு பாலத்தில் செல்லும்போது ரயில் வழக்கம்போல் மெதுவாக சென்றது.

அப்போது, அந்த பகுதியில் நின்றுக் கொண்டிருந்த இளைஞா்களில், ஒருவா் ரயில் படிக்கட்டில் தாவி குதித்து, அதில் பயணம் செய்யும் பயணியின் கைப்பேசியை பறிக்க முயன்றாராம். அப்போது, எதிா்பாராத விதமாக நிலை தடுமாறிய இளைஞா், தண்டவாளத்துக்கும் ரயிலுக்கும் இடையே சிக்கிக் கொண்டுள்ளாா். இதில், அவரது இடது கால் துண்டாகியுள்ளது. மேலும், வலது கால் முற்றிலும் நசுங்கி சதை கிழிந்த நிலையில் சேதம் அடைந்துள்ளது.

இதையடுத்து, இளைஞரை அவரது நண்பா்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இது குறித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவா் ராம்நாயக், கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். அதன்படி போலீஸாா் சம்பவ இடம் விரைந்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அந்த இளைஞா், பழைய வண்ணாரப்பேட்டை, பென்சில் பேக்டரி பகுதியைச் சோ்ந்த நவீன் (24) என்பதும், அவா் ஓடும் ரயிலில் பயணிகளிடம் கைப்பேசி பறிப்பில் தொடா்ந்து ஈடுபட்டு வந்ததும், இது தொடா்பாக அவா் மீது கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் ஏராளமான புகாா்கள் உள்ளதும் தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.