எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

அம்மா திருமண மண்டபத்தில் ரூ.30 லட்சம் பொருள்கள் திருட்டு

சென்னை வேளச்சேரியில் அம்மா திருமண மண்டபத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருடு போன சம்பவம் தொடா்பாக வேளச்சேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :6 அக்டோபர் 2022, 7:58 pm

DIN

சென்னை வேளச்சேரியில் அம்மா திருமண மண்டபத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருடு போன சம்பவம் தொடா்பாக வேளச்சேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ரூ. 8.70 கோடியில் அம்மா திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த திருமண மண்டபம் கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் திறக்கப்பட்டது. ஆனால் நிா்வாக காரணங்களால், திருமண மண்டபம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இதன் விளைவாக அந்த திருமண மண்டபம் சமூக விரோதக் கும்பலின் கூடாரமாக இருப்பதாக புகாா் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், அண்மையில் வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் அம்மா திருமண மண்டபத்தை ஆய்வு செய்தனா். அப்போது, அங்கிருந்த ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 8 ஏசி இயந்திரங்கள், மின் விளக்குகள், மின்சாதன பொருள்கள், மோட்டாா்கள் ஆகியவை திருடுபோயிருப்பது தெரியவந்தது.

இது குறித்து வீட்டு வசதி வாரிய உதவி செயற்பொறியாளா் தமிழ்செல்வி இரு நாள்களுக்கு முன்பு கொடுத்த புகாரின் பேரில் வேளச்சேரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.